கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர்!!(காணொளி)

642

கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. வீதியின் ஓரமாக சென்ற நபர் ஒருவரை முச்சக்கர வண்டியொன்று மோதிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக பலமாக மோதுண்டு தூக்கி ஏறியப்பட்ட நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதிகளின் மோசமான செயற்பாடு குறித்து பொலிஸார் எச்சரித்துள்ளது.

போட்டி போட்டு வீதியில் செல்லும் முச்சக்கர வண்டிகளால் விபத்துகள் ஏற்படுவதுடன், பாரிய வாகன நெரிசலும் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், தம்முயிரை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.