புதையல் எடுக்கச் சென்ற பெண் உட்பட்ட மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1102

இலங்கையின் புராதன தொல்பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர். அரலகங்வில, ஜயமுதுகம பகுதியில் பெண் உட்பட மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதையல் அகழ்வில் ஈடுபடுவதாக அரலகங்வில பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது தோட்டம் ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அரலகங்வில, ஜயமுதுகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இது போன்று பல இடங்களில் அண்மைக்காலமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும், மீறிச் செயற்படுவோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.