வவுனியா – நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கைப்பணி போட்டியை கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து “சில்ப நவோத 2018” எனும் தொனிப்பொருளில் நடத்தியிருந்தன.
இதில், அகில இலங்கை ரீதியில் பல பாடசாலைகள் பங்கு பற்றிய போதும் வடக்கிலிருந்து கலந்து கொண்ட பாடசாலைகளில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் அதிக வெற்றிகளை தனதாக்கி கொண்டது.
அந்த வகையில், சிரேஷ்ட பிரிவில் உ.ரதுஜினி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும், கனிஸ்ட பிரிவில் பி.பிரியகெளரி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தி.கபிசன் ஆறுதல் பரிசினையும் பெற்று கொண்டுள்ளனர்.
இந்த பரிசுகள் கடந்த திங்கள் கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










