நான் பார்க்கும் கடைசி முகம் : துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவியின் உருக வைக்கும் கவிதை!!

557

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் எழுதிய கவிதை வரிகள் உருக வைத்துள்ளது, ஸ்னோலின், தனது தாய் மீது கொண்டிருந்த அன்பை கவிதையாக வடித்துள்ளார்.

இன்னமும் தூங்கி எழுந்ததும் அம்மாவின் முகத்தில்தான் விழிக்க ஆசைப்படுகிறேன் என்று ஆரம்பிக்கும் அந்த கவிதையில், தூங்கும் முன் அம்மாவை இமைக்காமல் பார்த்துவிட்டே தூங்குவதாகவும், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாலும் கடைசியாக பார்த்தது அம்மாவின் முகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருக்கிறார் ஸ்னோலின்.

துப்பாக்கிச்சூட்டில் செவிலியர் படிப்பு படிக்கும் 17 வயது மாணவி ஸ்னோலின் துப்பாக்கிகுண்டுக்கு இரையானார். தன் மண்ணுக்கும் மக்களின் நலனுக்காகவும் போராட்ட களம் கண்டுள்ளார் ஸ்நோலின். வீறுநடை போட்டு முன் வரிசையில் சென்றவர் இறுதியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி விட்டார்.