வவுனியா குட்செட் வீதியில் 1ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை இன்று (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் கடத்திச் சென்றுள்ளனர்.
வெள்ளை வேன் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரன்பாடுகள் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் தெரிவித்திருந்தார்
வவனியா பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.







