இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மை நாட்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையினால், மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் கடும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் படும் கஷ்டங்கள் கமரா ஒன்றில் பதிவாகி உள்ளது.
புத்தளம் உடப்பு பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கடலுக்குள் படகினை செலுத்த போராடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
சுமார் 45 நிமிடங்கள் மீனவர்கள் போராடி கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு போராடுவது அன்றைய நாளில் தனது குடும்பத்தின் பசியை போக்குவதற்கான முயற்சியாகும்.
புத்தளத்தில் இருந்து மன்னார் வரையான கடல் பகுதிகளில் நிலவும் கடும் காற்றினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.