63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண், 73 வயதில் தந்தையான முதியவர்!!

331

ஈரோடு மாவட்டத்தில் 63 வயதில் மூதாட்டி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 73 வயதில் இவரது கணவர் தந்தையாகியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. இது அவர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது.

பழனி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகிய செந்தமிழ்ச்செல்விக்கு செயற்கை முறை கருத்தரித்தலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை மூலம் கருவுற்ற 63 வயதான செந்தமிழ்ச்செல்விக்கு மூன்றரை கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது.