மறைந்த பிரபல நடிகர் சந்தனின் மனைவி தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்ததோடு, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சந்தன் (34) கடந்த வாரம் தனது நண்பர்களோடு காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
சந்தனின் மரணம் அவர் மனைவி மீனாவை பெரும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.
இதன் காரணமாக இன்று தனது மகன் துஷரை மீனா கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து தற்போது மீனா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.






