வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்!!

1134

 

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரன்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு இ.போ.ச.சாலை சாரதிகளுக்கு அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் தனியார், இ.போ.ச பேரூந்துகள் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளை தரித்து நிறுத்தாமல் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக (வெளிச் செல்லும் பாதையில்) பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

இதன் போது தனியார் பேரூந்து ஒன்று பேரூந்து நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்பநிலை ஏற்பட்டது

தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன் இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக இடம்பெற்ற இம் முரண்பாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.