யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையில் அதிபரிடம் பொலிஸார் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என்பதை ஆராய்ந்து உறுதிபட அதிபர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும், அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் என அதிபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






