தூக்கில் தொங்கிய நபருக்கு நேர்ந்த கொடூரம்!!

595

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது கயிறு அறுந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

60 அடி உயரமான மரமொன்றில் கயிறு கட்டி இந்த நபர் தூக்கில் தொங்கியுள்ளார். இதன் போது கயிறு அறுந்து மேலும் 40 அடி பள்ளமொன்றில் வீழ்ந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மனைவி பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டையிட்டு எந்நேரமும் குடி போதையில் இருந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்தவரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.