எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.
அத்துடன், போக்குவரத்து கட்டணங்களை தூரத்தின் அடிப்படையில் அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.





