கதி கலங்கவைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு!!

364

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் வெறுப்படைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. அவர்கள் பாப்பினஞ்சேரி அருகே உள்ள சுற்றுலா தலமான செசிபாறைக்கு சென்றுள்ளனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்த கமல் குமாரும், அஸ்வதியும் அங்கிருந்த 270 அடி உயரபாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் இருவரும் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30மணியளவில் கெவின், மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ஒரு கண் தோண்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் அரங்கேறிய இந்த கொலைச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது