கொழும்பு நோக்கி பயணித்த ரயில்களை தடுத்து நிறுத்திய மர்ம சடலம்!!

499

கொழும்பு வந்த பல ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இருந்தமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை அந்த வீதியில் கொழும்பு கோட்டை வரை பயணித்த அனைத்து ரயில்களும் தாதமடைந்துள்ளது. குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்குரிய சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்னர்.

எனினும் காலையில் பயணித்த பல ரயில்கள் இடையில் சிக்கியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளார்.