வவுனியாவில் சம்பள உயர்வு கோரி தேசிய நீர் வழங்கல் அமைப்புச் சபை ஊழியர்கள் போராட்டம்!!

592

 

வவுனியா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் அலுவலக ஊழியர்கள் சம்பள உயர்வினை கோரி இன்று (01.06.2018) காலை 9 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை 30 வீதத்தினால் சம்பவ உயர்வு வழங்கப்படுவதாகவும் இந்த வருடம் சம்பள உயர்வு அதிகரிக்கப்படவில்லை இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 30வீதம் அதிகரிக்க விட்டாலும் பரவாயில்லை 25 வீதம் எனினும் அதிகரிக்குமாறு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எமது உயர் அதிகாரியோருவர் 25வீதம் சம்பள உயர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

ஆனால் இது வரையில் அக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. மாறாக சிறிய அளவிலான கொடுப்பனவே வழங்கப்பட்டது. குறைந்தது 25வீத சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தே வவுனியா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வருகின்ற திங்கட்கிழமைக்கு முன்பாக தீர்வு கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், இன்றைய தினம் பொதுமக்களும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சில சேவைகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.