சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக வயதான நபரை பெண்ணொருவர் போலியாக திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமை சேர்ந்தவர் ஹோ தி லன் (42). இவருக்கு அதிகளவு பணத்தேவை இருந்த நிலையில் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று அங்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இதையடுத்து ஹூ லான் (66) என்ற முதியவரை மதுபான விடுதியில் அவர் சந்தித்துள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த லானை போலியாக திருமணம் செய்ய விரும்புவதாக ஹே தி கூறிய நிலையில் அவரும் சம்மதித்துள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்த பொய் திருமணம் இரண்டாண்டுகள் நீடித்த நிலையில் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிக்கு சில ஆவணங்களை சரி பார்க்க ஹே தியும், லானும் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் போலி திருமணம் செய்தததை கண்டுப்பிடித்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஹு லானுக்கு எட்டு மாதங்கள் மற்றும் அதனோடு தனியாக நான்கு வாரங்களும் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலியாக திருமணம் செய்தது மற்றும் நீண்ட கால குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பொய் தகவல்களை கூறியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.





