வவுனியாவில் கடத்தில் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக தந்தை பொலிசாருக்கு தகவல்!!

348

வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருமாறு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை வெளிநாட்டிலுள்ள கணவர் வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கடத்திச் செல்லப்பட்டு கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாகவும் அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் குழந்தையின் தயாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற கைக்குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.