வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

996

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (01.06) காலை 9.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில்,

2 கிலோகிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பகுதியினை சேர்ந்த 48 வயதுடைய மோகன்ராஜ் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.