யாழில் கணவன் கண்முன்னே மனைவிக்கு ஏற்பட்ட நிலை!!

946

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கணவன் கண்முன்னே மனைவியின் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த தம்பதியினர், சந்தையில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது அவர்களை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தம்பதியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.