வவுனியா பழைய பேரூந்துக்கு அருகேயுள்ள உணவகத்தில் சுகாதார சீர்கேடான உணவுகள்!!

783

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள உணவத்தில் இன்று (02.06.2018) காலை நபர் ஒருவர் இடியப்ப பார்சல் ஒன்றினை பெற்றுள்ளார். அதனை வீட்டிற்கு சென்று திறந்த சமயத்தில் பெண்ணொருவரின் தலைமுடி காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து சைவ உணவகத்திற்கு ஊடகவியலாளருடன் சென்று இடியப்ப பார்சலை திறந்து உணவகத்தின் முகாமையாளருக்கு காண்பித்த சமயத்தில் அவர் குறித்த நபரிடம் மன்னிப்பு கோரினார்.

உணவகங்களின் பேணப்பட்ட வேண்டிய விதிமுறைகள் இவ் உணவகத்தில் பேணப்படுவதில்லை குறிப்பாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தலைக்கு உறை அணிவதில்லை, கையால் உணவுகளை கையாளுக்கின்றனர் என பல குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியது உங்களின் கடமையல்லவா? வவுனியா மாவட்ட சுகாதார உத்தியோகத்தர்களே இது உங்களின் கவனத்திற்கு.