மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன் : பதறவைக்கும் பின்னணி!!

1122

தமிழ்நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பானுபிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சதீஷ் என்ற இளைஞரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்கள் கடந்த நிலையில் மகளின் எதிர்காலம் கருதி அவர்களது திருமணத்தை பானுபிரியாவின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். மகளையும், மருமகனையும் தங்கள் வீட்டின் முதல் மாடியில் குடிவைத்தனர்.

வீட்டோடு மாப்பிள்ளையான சதீஷ் வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு போதையில் ஊதாரியாக சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வீட்டு சுமை பானுப்பிரியா தலையில் விழுந்த நிலையில் அவர் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றினார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மாடியிலிருந்து வெகுநேரமாக பானுப்பிரியா கீழே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்த போது அங்கு பானுப்பிரியா கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் பானுப்பிரியாவை கொன்றது சதீஷ் தான் என தெரியவந்தது. அவரை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான சதீஷ், தனது அன்றாட செலவுக்கு மனைவியின் கையை எதிர்பார்த்துள்ளார். மேலும், உடன் வேலை செய்வோரிடம் பானுப்பிரியா பேசுவதை கண்டு பானுபிரியாவின் நடத்தை மேல் சதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பானுப்பிரியாவை அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவதன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பானுப்பிரியாவிடம் ஏற்பட்ட தகராறில் அவர் கழுத்தை பெல்டால் இறுக்கி சதீஷ் கொன்றுள்ளார்.

மேலும், அவர் பிழைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக கத்தியாலும் கழுத்தை அறுத்தது தெரியவந்துள்ளது.