மறைந்த நடிகர் சந்தனின் மனைவி மன அழுத்தத்தால் அசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
கன்னட திரையுலகில் நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த சந்தன் கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கணவர் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்த அவர் மனைவி மீனா சில தினங்களுக்கு முன்னர் தனது மகன் துஷர் (13) கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சந்தனின் மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






