வவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று (02.06.2018) காலை 9.40 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இறம்பைக்குளம், பண்டாரிக்குளம், ஈச்சங்குளம், மரக்காரம்பளை, பூவரசங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வறிய மற்றும் பெண் தலமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 41 குடும்பங்களுக்கு 7720 ரூபா பெறுமதியான 25 கோழிக்குஞ்சுகளும் உணவுப்பாத்திரங்களுமே வழங்கி வைக்கப்பட்டன
இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் தி.செந்தில்ரூபன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் போ.மங்களநாதன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் இணைப்பாளர் பா.சிந்துஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.












