நீரில் மூழ்கி நபரொருவர் பரிதாபமாகப் பலி!!

513

வெலிகந்த – போவத்த பிரதேசத்தில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போவத்த எப்.சி கால்வாயில் நேற்று நீராட சென்ற வேளையே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியபேபொல – மெதவல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான நபரே உயிரிழந்துள்ள நிலையில், பிரதேச பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த காவல்துறை மேற்கொண்டு வருகிறது.  போவத்த எப்.சி கால்வாயில் நேற்று நீராட சென்ற வேளையே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.