தமிழகத்தில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொண்டு இரு பிள்ளைகளை கொன்ற தாயின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டின் சென்னிமலை எம்பிஎம் காலனியை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரி- சுந்தர்ராஜூ தம்பதி.
இவர்களுக்கு 14 வயதில் யுவராஜா என்ற மகனும், 12 வயதில் பூஜா என்ற மகளும் இருக்கிறார்கள்.
கணவன்- மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ உமா மகேஸ்வரி பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தியநாதன் என்பவருடன் உமா மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் சண்டை எழ, அழுதுக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி மன உளைச்சலில் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதன்படி நேற்றிரவு 11 மணியளவில் விஷ சாப்பாட்டினை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் விஷத் தாக்கம் தாங்காமல் உமா மகேஸ்வரி கதறி அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கே சிகிச்சை பலனின்றி உமா மகேஸ்வரி, யுவராஜ் இறந்து போக பூஜா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார், வழக்கு பதிவு செய்த சென்னிமலை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





