சகோதரி முன்னிலையில் 15 வயது மாணவி ஒருவர் செய்த காரியம்!!

291

புத்தளம் , நவகத்தேகம – முல்லேகம பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற குறித்த மாணவி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி தனது சகோதரியின் முன்னிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் உடலில் சிறிதளவில் தீ பரவியுள்ளதன் காரணமாக, மாணவி நவகத்தேகம பிரதேச வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நவகத்தேகம பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.