வகுப்பறையிலே தங்கி பாடம் எடுத்த ஆசிரியர் : ஆனந்த கண்ணீர் சிந்த விட்ட மாணவர்கள்!!

616

பிரேசிலில் இரண்டு மாதங்களாக பள்ளி நிர்வாகம் சம்பளம் தராத காரணத்தினால், மாணவர்கள் தங்களுடைய பணங்களை ஆசிரியருக்கு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிரேசிலில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் சம்பளம் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால், அவர் வகுப்பறையிலே தங்கி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.

ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிந்த அந்த மாணவர்கள் உடனடியாக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணங்களை எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர்.

அந்நாட்டு மதிப்பு படி சுமார் 1,505 ரியாலை மேஜையின் மீது வைத்துள்ளனர். இதைக் கண்டு முதலில் வாங்க மறுத்த அவர் அதன் பின் மாணவர்களிடன் அன்பு மிகுதியைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். இதைக் கண்ட மாணவர்கள் அவரை அரவணைத்து சமாதானம் கூறி தேற்றினர்.