தூக்கில் தொங்கிய அரசியல் பிரமுகர் : அரசியல் கொலையா?

1277

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக பிரமுகர் ஒருவரின் உடல் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தவா என்கிற ஊரை சேர்ந்தவர் துலால் குமார். இவர் சடலம் புருலியா மாவட்டத்தில் மின்மாற்றி கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே போல பலராம்பூர் கிராமத்தை சேர்ந்த பாஜக உறுப்பினரான த்ரிலோசன் மகாஜன் என்பவற்றின் சடலம் மரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் துலால் குமாரின் மரணம் அரசியல் கொலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த இரு கொலைகளும் அரசியல் கொலை என்பதால் சிபிசிஐடி பொலிஸார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார்.