ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த நபர்கள் கைது!!

535

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேப்பால மற்றும் சபை உறுப்பினர் வித்தானகே இசார, அனுருத்த மஞ்சநாயக்க உள்ளிட்ட 4 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா காவலல்துறையினரால் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு குறித்த குழந்தை கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நுவரெலியா நீதாவன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.