பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொழும்பில் எதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இன்று இரண்டு மாநாடுகள் ஆரம்பமாகின்றன.