25 அடி பள்ளத்தில் வீழ்ந்த வான் : மூன்று பேர் படுகாயம்!!

511

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம், இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் படுகாயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியள்ளது. விபத்தில் வான் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வான் அரச சார்பான நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் வீதி வழுக்கியதால் சாரதியால் வானை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.