வவுனியா நெடுங்கேணியில் உலக சுற்றாடல் தினம்!!

441

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று(05.06) உலக சுற்றாடல் தினம் பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வனஇலகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் வன அதிகாரி கே கே.நாணயக்கார தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இன்று 05.06.2018 உலக சற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இந்நிகழ்வினை வன இலகா திணைக்களம் தலைமையில் நெடுங்கேணி பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்தியிருந்தனர்.

இதன்போது சுற்றாடல் மாசாகுதல் தொடர்பான வழிப்புனர்வு கருத்தாடல்களை கலந்துகொண்ட அதிதிகள் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபைத்தவிசாளர் தணிகாசலம், உப தவிசாளர் யோகராஜா, நெடுங்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர் சத்தியநாதன், நெடுங்கேணி தலைமை பொலிஸ் உத்தியோகத்தர் சமந்த ரத்நாயக்க,

நெடுங்கேணி கிராம அலுவலகர் சுபாஸ், வவுனியா மாவட்ட வனஅதிகாரி கே.கே.நாணயக்கார, மேலதிக மாவட்ட வன அதிகாரி ஆர்.ரவிராஜ், நெடுக்கேணி வட்ட வன அதிகாரி லலித் தனசேன, மேலதிக மாவட்ட வன அதிகாரி குமார ஜீவ, நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், இலங்கை வங்கு முகாமையாளர், எனப்பலரும் கலந்துகொண்டதுடன் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையப்பகுதிகளில் கலந்துகொண்ட அதிதிகளினால் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டது.