திருமணம் முடிந்தும் தொல்லை : காதலன் நாக்கை அறுத்த காதலி, நாக்குடன் காவல் நிலையம் சென்ற தாய்!!

605

தனக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிய நிலையிலும் முன்னாள் காதலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், இளம்பெண் ஒருவர் நபரின் நாக்கை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச இளைஞன் ஒருவன் திருமணமான தனது முன்னாள் காதலிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பைசாபாத் இனாயத் நகரில் வசித்து வரும் பெண்ணின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சிக்க ஆத்திரமடைந்த பெண் அந்நபரை தண்டிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று அப்பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் மீண்டும் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சிக்க பொறுமையிழந்த பெண் அருகிலிருந்த கத்தியை கொண்டு நாக்கை அறுத்திருக்கிறார்.
நாக்கு துண்டாகி தரையில் விழ, நபர் தப்பி ஓடி விட்டாராம்,

இதற்கிடையே குறித்த நபரின் தாயார் வந்து சண்டையிட்டு அறுபட்ட நாக்கை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்று குறித்த பெண் மீது புகார் அளித்திருக்கிரார்.

அந்தப் பெண்ணும் காவல் நிலையத்தில் தன்னைக் காத்துக் கொள்ளவே அவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறார்.