வடமாகாணத்தில் , மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் நேற்று 05.06.2018 இலங்கை மின்சார சபையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாணத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
நேற்றுமுதல் வவுனியாவிலும் கேபிள் தொலைகாட்சி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையால் தொலைகாட்சி நிகழ்சிகளை பார்க்க முடியாதுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
எவ்வாறாயினும் தொலைக்காட்சி கேபிளூடாக மின் கடத்தப்பட்டமையால் யாழில் ஏழு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.