வவுனியா வடக்கு பிரதேசம் விளையாட்டுத்துறையில் தடம் பதிக்கும்-பிரதேச செயலாளர்!

474

vavuniya
வவுனியா வடக்கு பிரதேசம் சவால் நிறைந்த விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்ததொரு தடம் பதிக்கும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழா நேற்று நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது தலைமையுரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவத்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் விளையாட்டின் ஊடாக உள நலத்தில் சிறந்தவர்களாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். அத்துடன் எமது ஆற்றல்களை வெளிக்கொனர்வதற்கான தளமாக விளையாட்டினையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

எமது பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் அனைவரும் அக்கறையுள்ளவாகளாக செயற்பட வேண்டும். இன்று எமது பிரதேசம் மாவட்டம், மாகாணம், தேசிய மட்டம் என வெற்றிகளை ஈட்டும் வீரர்களை கொண்டதாக உள்ளது.
அவற்றுக்கு காரணமாக எமது பிரதேச விளையாட்டு விழாக்கள் காணரமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் எமது பிரதேசம் விளையாட்டுத்துறையில் தனக்கொன ஓர் இடத்தனை தக்க வைத்துக்கொள்ளும் என தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர

இவ்வாறான கஸ்டப் பிரதேசத்தில் இந்தளவிற்கு ஓர் விளையாட்டு நிகழ்வை நடத்துவதையிட்டு பொருமையடைவதோடு, இவ்விளையாட்டுவிழாவினூடாக நீங்கள் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவாகள் என்பதனையும் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. விளையாட்டு வீரரொருவர் விளையாட்டில் விருப்பமுடையவர் தான் சாந்திருக்கின்ற சமூகத்தின் நேசனாக மாறுவது நிச்சயம்.

விளையாட்டில் ஈடுபடுபவர்கள் எப்பொதும் வயது முதிர்வை அடைவதில்லை என நாம் கூறுவது வழமை. அந்தவகையில் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் செலுத்துபவர்களாக மாறி இப் பிரதேசத்தின் விளையாட்டுத்துறையை வளர்ச்சியடைய செய்யவேண்டும் என தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செலயாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சுக்களின் இணைப்பாளர் சில்வஸ்டார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் லலித், செட்டிகுளம் பிரதேச செலயாளர் ந. கமலதாஸ், வவுனியா தெற்கு உதவி பிரதேச செலயாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆனந், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஏ. ஆயகுலன், இராணுவ உயரதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.