வவுனியாவில் நடைபாதையை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

315

வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைக்காலங்களாக வீதிகளிலுள்ள நடைபாதைகளை திறந்து அதற்குள் குழாய் செலுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அவ்வீதியில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதிகளில் குறிப்பாக மக்கள் வந்து செல்லும் பிரதான வங்கிகள், கடைத் தொகுதிகளுக்கு முன்னால் செல்லும் நடைபாதைகளில் இவ்வாறு திறக்கப்பட்டு குழாய் செலுத்தப்படுகின்றது.

இதனால், நடைபாதை சேதமடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.