பாம்பு கடித்து இரத்தம் வருவது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

547

பால் குடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும்.
வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும்.

அருவருப்பான மனிதர்கள், காகம், மீன், இரத்தம், விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால் செல்வம் சேரும். காளைமாடு, அரசன், பசு,குதிரை, கோவிலில் பால் அபிஷேகம் செய்யப்படுவதாக கனவு கண் குடும்பம் மேன்மை பெறும்.

பணம், சாதம், வெற்றிலை, பாக்கு, தானியம், இவைகளைப் பெறுவதாகவும், சாடால் லாபம் கிடைக்கும்.

மாம்பழம், பசு சாணம், இவைகளைக் கண்டால் பெறும் காலம் அதிர்ஷ்டமாகும். காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையை ஓட்டிச் செல்வதாகவும் கனவு கண்டால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால் அதிர்ஷ்டம் அடிக்கும். மாடிப்படியில், மரத்தில், மலைமீது ஏறுவதாகக் கனவு கண்டால் உயர்ந்த நிலை கிடைக்கும்.