வவுனியாவில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு!!

294

வவுனியா பூவரசன்குளம் குருக்கள் ஊர் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் ஒருநாள் இலவச மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06.06) காலை 9.30 மணியளவில் இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிசே சபையின் அனுசரணையில் இடம்பெற்றது.

பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்கிவைத்தார்.

ஒருநாள் இலவச மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடி, மற்றும் சாதாரண நோய்களுக்கும் மருந்துகளும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது. காலை 9.30 முதல் பிற்பகல் 12 மணிவரையும் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமில் 140ற்கும் மேற்பட்டவர்கள் மூக்குக்கண்ணாடிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிசேச சபையின் பிரதான பிசப், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பம்மைமடு இராணுவ அதிகாரி எனப்பலரும் கலந்துகொண்டனர்.