வவுனியா மாவட்ட செயலக இப்தார் நிகழ்வு!!

1060

 

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு அரசாங்க அதிபர் சோமரத்தின விதானபத்திரண தலைமையில் நேற்று(07.06) புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக சமய நல்லிணக்கத்திற்கான இப்தார் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டருந்த இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக சர்வமத வழிபாடு இடம்பெற்றது. இவ் இப்தாரல் நிகழ்வானது வருடம் தோறும் வவுனியா மாவட்ட செயலகத்தில் நாடத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் கா.சிவகரன், சிங்கள பிரதேச செயலாளர் ஜானக, சர்வமதகுழுவினர், இராணுவத்தினர், பொலிசார் என பலர் கலந்து கொண்டனர்.