ஒரே இரவில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன் : செய்த அதிர்ச்சி செயல்!!

520

அமெரிக்காவில் நபர் ஒருவர் ஒரே இரவில் ஐந்து ஆண்டுகள் வாழ்க்கையை மறந்த நிலையில் தனது மனைவி, குழந்தைகள் குறித்தும் மறந்து போயுள்ளார்.

ஆடம் கோன்சேல்ஸ் என்பவர் தனது மனைவி ரக்குல் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஒருநாள் ஆடம் இரவில் தூங்க சென்றுள்ளார். பின்னர் காலையில் எழுந்த ஆடம் பிரம்மை பிடித்தவர் போல தனியாக உட்கார்ந்துள்ளார்.

அவரிடம் மனைவி ரக்குல் சென்ற போது அவரை பார்த்து நீங்கள் யார் என கேட்க ரக்குல் அதிர்ந்துள்ளார்.

அப்போது தான் தனக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதையே ஆடம் மறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆடமை ரக்குல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு ஸ்கேன் எடுத்ததோடு பல்வேறு சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்தநிலையில் ஆடமுக்கு என்ன நோய் வந்துள்ளது என்பதை மருத்துவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. சரியாக 2012 – 2016 வரை நடந்த அனைத்து விடயங்களையும் ஆடம் மறந்துள்ளார்.

அந்த சமயத்தில் தான் ஆடமுக்கு முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகி ரக்குலுடன் இரண்டாம் திருமணம் நடந்தது.

மேலும் இந்த காலக்கட்டத்தில் தான் அவருக்கு குழந்தைகள் பிறந்ததோடு முக்கிய குடும்ப நிகழ்வுகள் பல நடந்துள்ளது. ஆனால் பின்னர் ரக்குல் தான் தனது மனைவி என ஆடம் புரிந்து கொண்டுள்ளார்.

ஆனாலும் சொந்த மனைவி மற்றும் குழந்தைகளையே மறந்துள்ளது ஆடமை பெரிதும் பாதித்துள்ளது. ஆடமுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.