வேலையை விட்டு நிறுத்திய ஆத்திரத்தில் முகாமையாளரை துப்பாக்கியால் சுட்ட ஊழியர் : அதிர்ச்சி சம்பவம்!!

843

இந்தியாவில் பணியை விட்டு நீக்கிய மனிதவள மேலாளரை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரை சேர்ந்தவர் பினீஸ் சர்மா (50). இவர் மிட்சுபிஷி நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சர்மா நேற்று தனது காரில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த இரண்டும் பேர் காரை வழிமறித்துள்ளனர்.

ஆனால் சர்மா காரை நிறுத்தாமல் சென்ற நிலையில் பைக்கில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சர்மாவை சுட்டுள்ளார்.

கழுத்தில் குண்டடி பாய்ந்த சர்மா எப்படியோ சமாளித்து காரை அலுவலகம் வரை ஓட்டி சென்ற நிலையில் அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சர்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையில் சம்பவத்தில் தொடர்புடைய தயானந்த் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ஜோகிந்தர் சிங்கை தேடி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ஜோகிந்தர் சிங், சர்மா வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோகிந்தரை பணிநீக்கம் செய்தது சர்மா தான், அந்த ஆத்திரத்தை அவரை ஜோகிந்தர் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் தற்போது இச்செயலில் ஈடுபட்டுள்ளான் என கூறியுள்ளனர்.