சென்னை திருவள்ளூர் மாவட்டம் வயலார் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் அங்கிருக்கும் திருமழிசை பகுதியைச் சேர்ந்த எபினேசர் ராஜன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
எபினேசர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பொலிசார் அவரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதைக் கண்ட சங்கீதா தற்போது ராஜன் எந்த ஒரு திருட்டு வழக்கிலும் தொடர்பு கொள்வதில்லை, இதனால் அவரை உடனடியாக என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று பொலிசாரிடம் காவல்நிலையத்தில் கெஞ்சியுள்ளார்.
ஆனால் மறுப்பு தெரிவித்த பொலிசார், அவரை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது இதைக் கண்டித்து சங்கீதா திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சமப்வத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சங்கீதாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தின் முன்பு இச்சம்பவம் நடந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





