வவுனியா கூமாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு!!

480

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நேற்று (08.06.2018) ஆசிரியரும் UNFPA இளைஞர் கழகத்தின் தலைவி நிலூஷா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வுக்கான கருத்தரங்கில் UNFPA தலைவர் றெக்சன், வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் அருள், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் பிரதீபன், மீடியா மாணவன் சிம்சுபன், குருநாகல் பல்கலைக்கழக மாணவன் நிவோதன், கூமாங்குள சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை சிவாஜினி மற்றும் கபிலன் கலந்து கொண்டார்கள்.

இவ் நிகழ்விற்கு தமிழ் தாய் இளைஞர் கழகத்தால் மாணவர்களுக்கு அன்பளிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் மாணவர்களுக்கான மதிய நேர பானத்தினை அஸ்திரம் அமைப்பு வழங்கி வைத்தார்கள்.