வவுனியாவில் நீண்ட காலமாக தடை செய்யப்பட்ட வீதி பொது மக்களின் பாவனைக்கு!!

685

 

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்று வட்ட வீதிக்குச் செல்லும் வீதி நீண்ட காலமாக பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவ் வீதி மக்களின் பாவனைக்குத் திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நகரசபைத்தவிசாளர் இ.கௌதமன் மற்றும் நகரசபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்று (09.06.2018) காலை சென்று அவ் வீதியிலுள்ள தடைகளை அகற்றியதுடன், இன்றுமுதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியைத் திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் சந்தை சுற்றுவட்ட வீதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தி இலகுவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.