ஊடகவியலாளரின் வேண்டுகோளிக்கிணங்க வவுனியா பொலிஸார் செய்த சேவை!!

586

வவுனியா பொலிஸார் தென்பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவியை மேற்கொண்டுள்ளனர்.
தென் மாகாணத்தின் மாத்தறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இன்புளுவன்சா நோய்த்தாக்கத்தினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கான சுவாச பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்துள்ளனர்.

வவுனியா மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் மாத்தறை பிரதேச ஊடகவியலாளர்கள் விடுத்த கோரிக்கைக்கமைய வவுனியா வர்த்தகர் சங்கத்தின் மூலமாக 5000 சுவாச பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை வவுனியா வர்த்தகர் சங்கத்தினடம் இருந்து பெற்றுக்கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தரின் ஊடாக குறித்த பொருட்களை மாத்தறை மாவட்ட ஊடகவியலாளர்களிடம் வழங்கி வைத்திருந்தார்.