வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்களின் மாபெரும் சிரமதானம்!!

550

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா வரும் சனிக்கிழமை 16.06.2018 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் இன்று (10.06.2018) மாபெரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து இடம்பெற்றுவரும் இச் சிரமதானப் பணி மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், பிரதான வீதிகள், ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளை பெருமளவிலான இளைஞர்கள் துப்பரவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு பிரதேச இளைஞர்கள் முன்வந்து சிரமதானப் பணியில் ஈடுபடுவதை பார்த்த பிரதேச மக்கள் இவ் இளைஞர்களின் முயற்சியை பாராட்டிச் சென்றதை காணமுடிந்தது.

வவுனியா நரசிங்கர் ஆலயத்தின் திருவிழாவின் பெரும்பாலான வேலைகளை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச இளைஞர்களை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஆலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையங்கள் ஈடுபடுவது பாராட்டத்தக்கது.