பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டுக்கான செலவுகள் மக்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை ஏற்படுவதனை பிடிக்காத தரப்பினர் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
மாநாட்டுக்கான செலவுகளை மக்களிடம் அறவீடு செய்து கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது.அரசாங்கம் மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை திணிக்காது.
எதிரிகள் எவ்வளவு முயற்சித்தாலும் இலங்கை குறித்து உலக நாடுகளின் நன்மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. இந்த ஆண்டில் இதுவரையில் எட்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.