கைதவறி தன்னை தானே சுட்டு கொண்ட 2 வயது சிறுவன் : பின்பு நடந்தது என்ன?

665

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் கைதவறி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தைச் சேர்ந்தவர் Tasman Mail என்பவர் தனது 2 வயது மகனுடன் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது கைத்துப்பாக்கியை படுக்கையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மெய்லின் மகன் அதனை எடுத்து விளையாடிய போது துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல், ஆயுதங்களை அஜாக்கிரதையாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் மெய்ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளின் விளையாட்டுத்தனமாக தான் இருப்பார்கள். குழந்தைக்கு முன் எந்த பொருள் வைப்பதற்கும் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.