மன்மோகன் சிங்கின் வருகையின்மை இலங்கை மாநாட்டின் வெற்றியை பாதிக்காது : ஜி.எல்.பீரிஸ்!!

317

manmohanஇந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமையானது மாநாட்டுக்கு பின்னடைவல்ல என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் வெற்றியை மன்மோகன்சிங்கின் வருகையின்மை பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது வருகையின்மைக்கான காரணத்தை விளக்கி மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் தனிப்பட்ட ரீதியில் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டுக்கு வந்திருந்தால் அது இலங்கைக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.