டெண்டுல்கர் என்னை கேலி செய்தார் : மெக்ராத் குற்றச்சாட்டு!!

317

mcகிரிக்கெட்டில் கேலி சாதாரணமானதொன்று. களத்தில் ஆடும்போது வெறுப்படைய செய்து சீண்டி பார்ப்பது தான் கேலி. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் டெண்டுல்கர் தன்னை கேலி செய்ததாக அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.

2000ம் ஆண்டு ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் தன்னை டெண்டுல்கள் கேலி செய்ததாகவும், ஆனால் இது ஆட்டத்தில் ஒரு பகுதியே என்றும் அவர் கூறியுள்ளார்.

டெண்டுல்கரை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர் முரளிதரன், போல்லாக் ஆகியோருடன் இணைந்து மெக்ராத் இரண்டாவது இடத்தில் உள்ளார். 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பிரெட்லீ அதிக பட்சமாக சச்சினை 14 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.